Wednesday, September 14, 2011

மந்திர புன்னகையும்.... மஞ்சள் நிலவும் ....


அது ஒரு கனவு தேசத்தின் பின் மாலை நேரம் ..அது வரை மாலை பொழுதின் ஒளி சிதறல்களால் மின்னிகொண்டிருந்த அந்த மலைக்குன்று மெல்ல மெல்ல இருளால் நிரம்பி கரிய யானையை போல் மாறிக்கொண்டிருந்தது ...யானையின் பாகன் போல குன்றின் மேல் உட்கார்ந்து தன் எதிரே பறந்து விரிந்திருந்த அரபிக்கடலை கோபி வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் . வழக்கம் போல மதியம் ஆரம்பித்து மாலை வரை குன்றின் சமதளத்தில் கால்பந்து ஆடிய களைப்பில் தன் கையில் இருந்த நுங்கு மட்டையில் நீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான் ...தன் பின்னால் யாரோ குதிப்பதை உணர்ந்து திரும்பினான் , ஹேய்ய் !! ஹேய்ய்  என குதித்தபடி வினு எதற்கோ டாட்டா காட்டிக்கொண்டிருந்தான் .. யாருக்கு இப்ப நீ டாட்டா சொல்லிட்டு இருக்க ...வினு கோபியின் கழுத்தை கட்டியபடி கடலை நோக்கி கையை நீட்டினான் ... அடி வானின் சிகப்பு நெருப்பிலிருந்து நழுவி கடலின் நீல துருவத்தில் விழுந்திருந்தது சூரியன் ..அட போதும் நீ சூரியனுக்கு கை காட்டினது , பாட்டி தேடும் வீட்டுக்கு போகலாம் வா வா ...தம்பியின் கையை பிடித்து போக எத்தனித்தான் கோபி ...

கோபிணா... .

என்னடா குட்டி .. 

அந்த லைட் ஹவுஸ் கு போகலாம் வாண்ணா..அங்க இருந்த  ஹீமன் கத்தி காணாம போய்டுச்சு  .. அதுனால தான் அது இப்போ எரிய மாட்டிகுது தெரியுமா ... சமதலத்தின் கிழக்கே மற்ற கலங்கரை விளக்கங்களை போல இல்லாமல் முற்றிலும் கரிய நிறத்தில்  இருந்த அதை கோபி பார்த்தான் ..
    
                   "  ஓ.. அப்டியா ..சரி யாரு இத உன் கிட்ட சொன்னது ?.."

"கார்த்தி மாமா தான் சொன்னாரு ... அன்னைக்கு மாமா கூட ஊர்ல இல்லையாம் ..அந்த டைம் பாத்து அந்த பேய் seletor ஹீமனோட கத்திய தூக்கிட்டு போயிடுச்சாம் .. மாமா இருந்திருந்தா எப்டியாவது காப்பாத்தி இருப்பார் ல .. "
"அந்த பேய் பேரு  seletor இல்ல skeletor .. சரி மாமா பேய் குட சண்ட போட்டு நி எப்ப பாத்த.." கோபி கிண்டலாய் சிரித்தபடி வினவினான் ..
சரி உன் கிட்ட மட்டும் அந்த ரகசியத்த சொல்றேன் .. 
"எங்க சொல்லு பாப்போம் .. "
அந்த லைட் ஹவுஸ் ஹீமன் கத்தி நால தான் இத்தனை நாளா எறிஞ்சிட்டு இருந்துச்சாம் .. போன வருஷம் ஹீமன் ஊருக்கு போனதுல இருந்து அத கார்த்தி மாமாவும் அவரோட பிரண்டு  வீரா மாமாவுந்தான் பாத்துட்டு இருந்தாங்க .. 
"சரி சரி .. உனோட சட்ட எங்க ?..."
நான் தான் இன்னைக்கு விளையாடறதுக்கு சட்டயே போட்டு வரலையே .. சரிடா குட்டி வேகமா வா .. எனக்கு பசிக்குது .. கரையை நோக்கி இறங்கிய பாதையில் இருவரும் இறங்கி ஓடினார்கள் ...

அன்றிரவு ..ஆழ்கடலின் குளிரைப்பெற்ற  மேகங்கள் அந்த பிரதேசத்தை சூழ தொடங்கி இருந்தது ...என்ன மாமா ..ஹீமன் கத்திய நீங்க தான் வச்சுகிட்டு இருந்தீங்க போல ..வீட்டின் வெளிய கயத்து கட்டிலில் படுத்திருந்த கார்த்தி மாமாவைப்பார்த்து கோபி கேட்டான் ..

ஆ அதுவா .. சிறுசு கடலுக்கு போகணும்னு அடம் பன்னுனாப்பா.. அதான் அவன் பாக்கற கார்டூன வச்சு சும்மா மெரட்டி வச்சு இருக்கேன் ..கோபிக்கும் ,வினுவுக்கும் கார்த்தி மாமா தான் ஹீரோ ..கார்த்தியும் அவனின் ஆஜானுபாக நண்பன் வீராவும் அந்த ஊரின் பள்ளியில்  வாத்தியார்கள்,அந்த சிறிய ஊரின் செல்வாக்கான இளவட்டங்கள் . இதுவரை கோபி ,வினுவின்  எல்லா  கோடை விடுமுறைகளும்   கேரளா எல்லையை ஒட்டிய இந்த கிராமத்து பாட்டி வீட்டில் கார்த்தி மாமாவோடு அழகாய் கழிந்தன    ...இந்தமுறை உட்பட .. 

அதுவரை வானத்தில் முழுதாய் படர்ந்த கருமேகங்கள் நிலவை விழுங்க தொடங்கியது  .. வான அரங்கு மழை வைபவத்திற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது .. கொஞ்ச நேரத்துல உள்ள போய்டலாம் என்ன .. கார்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே வினு பொத்தென அவர்களின் நடுவே விழுந்தான்.. 
"ரெண்டு பெரும் என்ன பேசிட்டு இருக்கீங்க .. நா இன்னைக்கு இங்க தான் தூங்க போறேன் ..!!"
அதுவாடா செல்லம் .. இன்னைக்கு ராத்திரி அந்த skeletor பேய் வானத்துல இருந்து  வர போகுது ..அதோட கத்தி கூட தெரியுது அங்க பாரேன் ..கார்த்தி காட்டிய கீழ்வானில்  மின்னல் முளைத்து சரேலென நடுவானில் பாய்ந்தது .வினு அலறி போர்வையை போர்த்திக்கொண்டு கார்த்தி மாமாவை கட்டிக்கொண்டான் .. அதற்குள் மழை தொடங்கி இருக்க கார்த்தி வினுவை போர்வையோடு பொத்தி வீட்டுக்குள் படுக்க வைத்தான் ..வினு பயத்தில் உடனே தூங்கிபோனான் ..
வினுவின் கோடைகாலம் ஆனந்தமாய் கழிந்துக்கொண்டிருன்தது ..பகல் முழுக்க புதுப்புது விளையாட்டுக்கள் .. மாலையில் மலைக்குன்றின் சமதளத்தில் அண்ணனோடு கால்பந்து.. பாட்டியின் சமையல் ,கோடையின் நன்கொடையான மாம்பலம் ,பழா,இளநீர் ,நுங்கு ..பாட்டிக்கு தெரியாமல் கார்த்தி வாங்கி தரும் ரோஸ் மில்க்  ,.. கார்த்தியின் புல்லட்டில் முன்னாடி அமர்ந்து செல்லும்போது அதை தானே ஓட்டுவதை போல் வினு உணர்ந்தான் ...

கோபி போன ஆண்டு இங்கு வந்தபோதே நீச்சல் பழகி இருந்தான் ..அதனால் இந்த முறை மதிய உணவு உண்ணும் நேரம் வரை கார்தியோடும்,வீராவோடும் ஊர் எல்லையில் இருந்த கிணற்றில் கழித்தான் ..கிணற்று குளியல் அவர்களின் பசியை தூண்டி பாட்டி செய்யும் நாட்டுக்கோழி குழம்பையும் , நண்டையும் ஒரு பிடி பிடிக்க உதவியது ..அன்று அவர்களோடு வினுவும் சேர்ந்துக்கொண்டான் ..கிணற்ற்றுக்குள் skeletor பதுங்கி இருப்பதாக கார்த்தி சொல்லியும் அவன் கேட்கவில்லை ..

"எனக்கு அந்த பேய் பாத்து எல்லாம் பயம் இல்லையே .. என்ன ஹீமன் காப்பாத்துவான் .. இல்லனா நீயும் வீரா மாமாவும் காப்பாத்துங்க" என சொல்லியபடி யாரும் எதிர்பாக்காத வேலையில் வினு தண்ணீரில் குதித்தான் ..கார்த்தி பதறியடித்து கிணற்றில் குதித்தான் ..சற்று நேரத்தில் வினுவின் தலைமுடியை பிடித்து அள்ளி அவனை மார்போடு அணைத்து பக்கத்தில் இருந்த மருத்துவர் வீட்டுக்கு ஓட தொடங்கினான் .. வினுவிட்கு உடல் நடுங்கியது ..எதன் மேலோ பயங்கர வேகத்தில் பயணிப்பதாய் உணர்ந்தான் ..சட்டென நினைவு வந்த  தான் கார்த்தி மாமாவின் தோள்மேலே இருப்பதை உணர்ந்த வினு .. மாமா அந்த பேய் பின்னாடி தொரத்திகிட்டு வருதா என பாவமாய் கேட்டான் .. கார்த்தி அதன் பின்னே வினுவை ஹீமன் கதையை சொல்லி ஏமாற்றக்கூடாது என நினைத்துக்கொண்டான் ..மறுநாள் முதல் கார்த்தியும்,வீராவும் வினுவை கயிற்றில் கட்டி கிணற்றில் இறக்கினர் ,அதன் அடுத்த இரண்டு வாரத்தில் அந்த வட்டத்தில் மிகச்சின்ன வயதில் நீச்சல் கற்றவனாய் வினு ஆகியிருந்தான் ..ஆனால் ......நம் வினுவை இப்போது காய்ச்சல் பற்றிக்கொண்டது ...

அந்த  சனிக்கிழமை வழக்கம் போல என்னை தேய்த்து ஊறவைத்து வினுவை குளிப்பாட்டிய பிறகு கார்த்தியும், கோபியும் அவனை பற்றிக்கொள்ள அவனுக்கு வழுக்கட்டாயமாய் குப்பைமேனி இலையின் சாறு தரப்பட்டது ..வினு அழுதபடியே வாயிலேடுத்தான். அவனுக்கு பூரணமாய் காய்ச்சல் அதில் குணமானது ..ஞாயிற்றுக்கிழமை பாட்டி கொடுத்த கசாயத்தால் வினுவிட்கு பசித்தது ..அன்று பாட்டி வைத்த ரசம் சாதமும் ,வத்தலும் ,காரதொக்கும் அமிர்தாய் இருந்தது...அமிர்தை உண்ட வினு  திண்ணையில் கார்த்தி மாமாவின் மடியில் உறங்கிபோனான் . பின்மாலை நேரத்தில் விழித்த வினுவிட்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது .. அது பக்கத்துக்கு ஊரிலிருந்து வந்திருந்த அவனின் மற்றொரு மாமன் மகள் திவ்யா....

..................... .............................. ........................................ ............................ .................................

விடுமுறை இன்னும் சில நாட்களே மீதமிருந்தது ...திவ்யாவின் வருகை வினுவினுள்ளே மாற்றங்களை உண்டுபண்ணியது , குறிப்பாக கோபியுடனும் கார்த்தியுடனும் அவனுக்கிருந்த உறவில் .. ஹீமனுக்கு பிறகு மிகவும் பலம் வாய்ந்தவனாய் தான் கருதும் கார்த்தி மாமாவோடு போட்டி போட்டு வெல்ல  அவன் மனம் நினைத்தது .. இன்னும் ஏன் ஹீமான் அங்கே இருந்திருந்தால் அவனோடு கூட நம் வினு மோதியிருக்கக்கூடும் .. காரணம் வேறு என்ன... திவ்யா தான் ..கோபியும் , கார்த்தியும் மாறி மாறி திவ்யாவை கொஞ்சுவதும் , புல்லட்டில் அவளை தூக்கி உட்காரவைத்து ஓட்டுவதும் வினுவினுள்ளே அதுவரை அவன் கண்டிராத உளைச்சலை உண்டுப்பன்னியது ....
                           "எங்க மாமா போயிட்டு இருக்க ... " அன்று காலை கையில் கயிறுடன் கிளம்பிய கார்த்தியை பார்த்து கோபி கேட்டான் ..
                           "சிறுசுங்க ரெண்டுத்துக்கும் சைக்கிள் கத்துதரலாம்னு இருக்கேன் டா... அதான் hour சைக்கிள் கடைக்கு போயிட்டு இருக்கேன் .." சற்று நேரத்தில் அந்த நீல நிற குட்டி அட்லஸ் சைக்கிள் கார்த்தியின் புல்லட்டில் கட்டி எடுத்துவரப்பட்டது .. முதல் நாள் சைக்கிள் ஓட்டும் முயற்சியில் வினு தேறவில்லை ..தனக்கு முக்கியத்துவம் தராமல் திவ்யாவிற்கு கோபியும், கார்த்தியும் அக்கறையெடுத்து சொல்லிக்கொடுப்பதாய் அவன் நினைத்ததே காரணம் ...பின் இரண்டோருனாட்கள் இப்படியே கழிந்தன .. கோபியும் கார்த்தியும் சைக்கிள் கற்றுத்தரும் ஆர்வத்தை இழந்து காத்தாடி விட்டு விளையாட தொடங்கி இருந்தனர் ..நம் வினுவையும் சைக்கிளையும் இரண்டு நாட்களாய் காணவில்லை .. திவ்யாவையும் தான் ,,,, 

                             பகல் முழுதும் கரைத்து குடித்த  வெப்பத்தை ,அலைகளால் அடித்து வரப்பட்ட மாலை தென்றல் ஆற்றிக்கொண்டிருன்தது ..அந்த சிறிய கடலை ஒட்டிய சாலையில் கார்த்தியின் புல்லட்டின் பின்னே அமர்ந்தபடி கோபி காத்தாடி விட்டுக்கொண்டிருந்தான் ..மலைக்குன்றை ஒட்டி சாலை கீழ்நோக்கி வளைந்து இறங்கியது ... அதீத இறக்கம் இது . கார்த்தி அதில் இறங்க எத்தனித்து  தன் வண்டியை neutral கு மாற்றினான் ..அந்த கணம் அவன் கண்ட காட்சி அவனை பரவசத்தில் ஆழ்த்தியது .. டேய்  மாப்ள !! அங்க பாருடா நம்ம சிறுச ......அவன் காட்டிய பக்கம் கோபி எட்டி பார்த்தான் ...மலையை ஒட்டி  வளைந்து இறங்கிய அந்த சாலையில் மின்னல் வேகத்தில் அந்த குட்டி சைக்கிள் போய்க்கொண்டிருந்தது ..சைக்கிள் ஐ மிதித்தபடி வினுவும் பின்னால் இருந்த கேரியரில் திவ்யாவும் ..சாலையின் முடிவில் சைக்கிள் ஐ அனாசியமாய் ஒரு திருப்பு திருகி வினு நிறுத்தினான் ..
   
அன்றிரவு ... எப்டிடா குட்டி இவ்ளோ அழாக சைக்கிள் ஒட்ட்டுற ..கார்த்தி வினுவை தூக்கி கொஞ்சினான் ...வினுவிட்க்குள் பெருமை பொங்கியது .. எல்லாம் ஹீமான் பவர் மாமா !! ...

"ஆமா ஹீமான் பவரு !! அது என்ன கால் முட்டில ரத்தம்?" - இது கோபி ..

"நீயா கத்து கொடுத்த .. நானா கீழ விழுந்து கத்துக்கிட்டேன் ..".வினு முதன்முறையாய் கோபியை அதட்டினான் ..அன்றிரவு வினு ஏதோ எல்லாரையும் வென்றுவிட்டதாய் பெருமையாக தூங்கினான் ...
அதே பெருமையோடு மறுநாள் காலை கண் விழித்தவனுக்கு அதிர்ச்சி .
." ஆ !! என் ஜட்டிய யாரு எடுத்தது  !!" 
போர்வையை எடுத்து கீழே மறைத்தான் .. நல்ல வேலை .. திவ்யா அங்கு இல்லை ..போவையை கட்டிக்கொண்டு வெளிதின்னைக்கு வந்தான் .
" மாமா .. உன் புல்லெட் சாவியக்குடு .. இன்னைக்கு நானும் திவ்யாவும் அதுல போக போறோம் .".திவ்யாவை பெருமையாக ஒரு பார்வை பார்த்தான் .. அவள் ஏளனமாய் தலையில் அடித்தபடி சிரித்தது வினுவிட்கு சந்தேகத்தை உண்டுபண்ணியது ..

"புல்லெட் அப்புறமா ஒட்டுவ .. உனோட ஜட்டி எங்க ராசா .."கேலி செய்தான் கோபி .. நேத்து ராத்திரி நி தூங்கினப்ப உன்ன தூக்கி நானும் மாமாவும் வீட்டுக்குள்ள படுக்க வச்சோம் .. எப்பயும் மாதிரி அப்ப நி தூக்கத்துல ஒன்னுக்கு போய்ட்ட ..அதுவும் மாமா மூஞ்சிமேல ..கோபி சொல்ல சொல்ல வினுவிட்கு இருக்ககொல்லாமல் வெட்கம் வந்தது ...இன்னும் அழுகை கூட வந்தது ... அன்றிரவு என்ன ஆனாலும் சரி .. தூங்காமல் முழித்தாலும் சரி .. படுக்கையை நனைக்க கூடாது என வினு முடிவு செய்தான் ...அன்றிரவு மணி பத்தாகியும் அவன் தூங்கவில்லை ...
 கன்ன மூடி தூங்கு டா செல்லம் . அங்க பாரு திவ்யா தூங்கிட்டா பாரு.. கார்த்தி வினுவை கொஞ்சிக்கொண்டிருந்தான் .. போ ..!! வினு சிணுங்கினான் .. இன்னைக்கு காலைல என்னைய கிண்டல்  பன்னுநீங்கள்ள .. ந தூங்காம முழிக்க போறேன் .. மறுபடியும் skeletor கதையை சொல்லி வினுவை தூங்கவைக்க மனம் வராமல் எதையோ யோசித்தபடி கார்த்தி தூங்கிபோனான் ..வினுவும் சற்று நேரத்தில் சுற்றியிருந்த தென்னமரங்களின் தாலாட்டும் காற்றில் துயிலுற்றான் ....மறுநாள் காலை வினு கோபியை பார்த்து பாசாங்கு செய்து துள்ளி குதித்தான் ..நான் தான் ஜெயிச்சேன் !! நான் தான் ஜெயிச்சேன் !! ஈரமாகாத தன் ஜட்டியை காட்டியபடி வினு ஓடினான் ...
பாரு மாமா இந்த  பயல .. சொன்ன மாதிரியே படுக்கைய நனைக்காம தூங்கிட்டானே ...பொறாமை கலந்த ஆச்சர்யத்தில் கோபி கேட்டான் ...

"அது ஒன்னும் இல்லடா மாப்ள .. பயப்புள்ள நேத்தைக்கும் சர்ருன்னு படுக்கையிலேயே பேஞ்சிட்டான்.. நான் தான் வேற ஜட்டியையும் ,படுக்கையும் மாத்திவிட்டேன் .. டவுசர் மாருனதுக்கூட தெரியாம சிறுசு ஓடுது பாரு .... "
"பெரிய ஆள் தான் மாமா நீ ..... "

..................... .................................  ............................................... .................................... ..........

விடுமுறை முடிய ஒரு நாள் தான் மீதமிருந்தது ...ஹீமனை பார்க்காமலே ஊருக்கு திரும்ப வினுவிட்கு கலக்கமாய் இருந்தது " செல்ல குட்டி இங்க வா "... லைட் ஹவுஸ் ஐ பார்த்தபடி நின்றிருந்த  வினுவை கார்த்தி அழைத்தான் ..:"என்ன அங்க போகனுமா ... ந இன்னைக்கு சாயங்காலம் கூட்டிட்டு போறேன் சரியா " .. 
"ஐ அப்போ நாம இன்னைக்கு ஹீமான் அ பாக்க போறோமா  ! " வினு முகத்தில் உற்சாக ரேகைகள் ... " இங்க பாரு குட்டி .. ஹீமான் எல்லாம் சும்மா .. அப்டி எல்லாம் யாரும் கிடையாது ... அந்த லைட் ஹவுஸ் போன மாசம் அடிச்ச இடியில வேல செய்யாம போய்டுச்சு .. அவ்ளோ தான் .. புரியுதா "

" போ மாமா நீ  சும்மா சொல்ற .. நா நம்ப மாட்டேன் போ ..  இன்னைக்கு மதியம் நீயும் எங்க கூட football ஆட வா .. சரியா ..." 

அன்று மலை  குன்றின் சமதளத்தில் உள்சாகம் கரைப்புரண்டது ..கார்த்தி ஒரு அணிக்கு தலைவனாயும் ,வீரா மற்றொன்றின் தலைவனாயும் கால்பந்து  களைக்கட்டியது ..அலைகடல் பார்வையாளனாய் ஆர்பரித்தது..ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் கருமேகங்கள் திரண்டு வந்து சூரியனை மறைத்தன ..மேகங்களின் ஊடே ஆர்வம் தாங்காமல் சூரியன் தன கதிர்களை சிகப்பு ,ஊதா,மஞ்சள் நிறங்களில் சிதறடித்து வானவில் கோலம் போட முயன்றது ..கால்பந்தில் கில்லாடியான கோபி கார்த்தி பக்கம் இருந்தான் .. வினு வீராவின் அணியில் .. இதுவரை வினு கோல் ஏதும் போட்டதில்லை ..ஆட்டம் தொடர்ந்தது ... இரு அணிகளிலும் தலா மூன்று கோல் அடிக்கப்பட்டன .. இன்னும் பத்து நிமிடங்கள் ஆட்டம் தொடரலாம் ....அதுவரை ஆட்டத்தில் ஆர்பரித்த கருமேகங்கள் மகிழ்ச்சி தாளாமல் சாரல் மலர்களை தூவ தொடங்கியது  ..."என்ன வீரா மழை வருது... ஆட்டத்த முடிச்சுக்கலாமா ?" கார்த்தி கேட்டான் ...  வீரா தன் அருகில் சற்றும் உற்சாகம் அடங்காமல் ஓடிக்கொண்டிருந்த வினுவை காட்டி கண் அடித்தான்...எதையோ புரிந்துக்கொண்டவனாய் கார்த்தி கோபியை பார்த்தான் .. அவன் வினுவிடம் பந்துக்கு மல்லுக்கொட்டி கொண்டிருந்தான் ... கார்த்தி வேண்டுமென்றே கோபியை லேசாக தள்ளிவிட்டான் ...பந்து வினுவின் வசம் வந்தது ...சரியாக பதினைந்து மீட்டர் தொலைவிலிருந்த கோல் கம்பத்தை நோக்கி வினு பந்தை அடித்தான் ...இந்த ஒரு உதைக்காகதான் இத்தனை நாள் காத்து இருந்ததை போல பந்து பாய்ந்தது ...

மந்திர உதை ...இடையில் நின்றவர்களின் இடைவெளிகளில் புகுந்து ..நேராய் கோல் கீப்பரின் கையை நோக்கி உருண்டி சென்றது ..கார்த்தி ஏமாற்றத்தின் விளிம்பில் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்த மாயஜாலம் நிகழ்ந்தது ..குன்றின் மிக அருகிலிருந்த அந்த கலங்கரை விளக்கம் பளீரென எரியதொடங்கியது ..அடுத்த நொடி இடையிலிருந்த கல்லில் பட்டு பந்து மேலெழும்பி கோல் கீப்பரின் தலைக்கு மேல் பறந்து கோலில் விழுந்தது ....வீராவும் மற்றவர்களும் வினுவை தலைக்குமேல் தூக்கியபடி உற்சாகத்தில் ஓடினர் ..கலங்கரையின் வெளிச்சம் சுழன்று அடித்தது..சாரலாய் தூவிய மேகங்கள் இப்போது சாரை சாரையாய் பொழிய ஆரம்பித்தது ...


மாமா !! அங்க பாரு !! ஹீமன் வந்தாச்சு !! ஹீமன் வந்தாச்சு !! என கத்திக்கொண்டு வினு கலங்கரையை நோக்கி ஓடினான் .. 

என்ன மாமா இது ?? ஆச்சர்யம் தாங்காமல் கோபி கேட்டான் .. இன்னைக்கு காலைல இருந்து அத  சரி  பண்ணிக்கிட்டு இருந்தாங்க கோபி ..ஆனா அதுக்குள்ள எப்டி சரி  ஆச்சுனு ஆச்சர்யமா இருக்கு ....என கார்த்தி வியந்தான் ......
ஹீமன் ஹீமன் என வினு மழையில் குதித்து ஆடிக்கொண்டிருந்தான் ... சிறுவயதில் நம் உலகம் மிகப்பெரியது .. விசித்திரமானது ... அங்கே புலிகளும் மான்களும் ஒன்றாய் பாடி ஆடும் ..அங்கே பெற்றோலின் விலை என்றுமே ஏறுவதில்லை ....விடுமுறை முடிந்த வாட்டதிலிருந்த கோபியின் தோள்களை கார்த்தி மெல்ல பற்றினான் .. கோபி அந்த மந்திர உலகை விட்டு பிரிந்து சில வருடங்கள் ஆகிவிட்டதை கார்த்தி உணர்ந்தான் ..ஒவ்வொரு ஆண்டும் வினு இங்கே வரும்போது கார்த்தியும் அந்த மந்திர உலகில் சஞ்சரித்தான் ... இனி அவன் மீண்டும் ஹீமன் ஐ பார்க்க ஒரு வருடம் காத்திருக்கவேண்டும் ....!!!!































Thursday, October 1, 2009

நடத்துனன் ஆவி ....


நான் என் கல்லூரி பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது மணி இரவு 10.10 .. சுத்தமாக அங்கே ஆள் நடமாட்டமே இல்லை .. டிசம்பர் மாத குளிரில் எனது காய்ச்சல் இன்னும் 2 டிகிரி எகிறியது ... அறையைவிட்டு கிளம்பும்முன் முத்து சொன்னான் ..
" டேய் இன்னும் ரெண்டு நாள் ல practicals டா .. அதுவும் உனக்கு காய்ச்சல் வேற 110 கிலோமீட்டர் பயணம் செஞ்சு வீட்டுக்கு போக போறியா ? என்றான் ...

" இல்லடா .. வீட்டுக்கு போனாதான் இது சரி ஆகும் ... நைட் பஸ் ஒன்னு இருக்கு டா .. எனக்கு தெரியும் நா பாத்துகறேன் "

நான் எதிர்பார்த்த பேருந்து வரவே இல்லை ... சரி .. அறைக்கு திரும்ப முடிவு செய்த வினாடியில் என் அருகில் ஒரு பேருந்து வந்து நின்றது ... வண்டியின் முகப்பு விளக்குகள் அனைக்கபட்டிருந்தது .. முகப்பில் "காளிங்கா டிராவல்ஸ் " என்பது சன்னமான இருளில் தெரிந்தது... "சார் திருத்தணி போகுமா என நடத்துனரிடம் கேட்டேன் .. "போகும் ... ஏறு ..." அதட்டலாய் பதில் வந்தது ..

வண்டிக்குள் ஏறிய எனக்கு சற்றே திகைப்பு .. அதில் என்னை தவிர பயணிகள் யாருமே இல்லை ... ம்ம் .. இன்னும் 10 நிமிடத்தில் மதுராந்தகம் வரும் .. அடுத்து செங்கல்பட்டில் கூட்டம் ஏறலாம் என நினைத்துக்கொண்டேன் ... செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக இரண்டுமணி நேரத்தில் எங்கள் ஊரை அடையலாம் .. நான் கணக்கு போட்டுகொண்டிருந்த நேரத்தில் வண்டி சரேலென இடபக்கமிருந்த இருண்ட சாலையில் திரும்பியது .. எனக்குள் பயம் படர ஆரம்பித்தது , நடத்துனரிடம் கேட்டேன் .. "சார் வண்டி எந்த ரூட்ல போகுது ? உத்திரமேரூர் வழியாவா ? ... "ஆமா " மீண்டும் அதட்டலாய் பதில் சொன்னான் ..
" சார் டிக்கெட் .... எவ்ளோ சார் " .. " 38" .. நான் இரண்டு இருபது ரூபாயை நீட்டினேன் ...

அவன் கொடுத்த பயண சீட்டையும், சில்லறையையும் பார்த்ததில் எனக்கு காய்ச்சல் அதிகமாகியது .. வரிசை எண் , வண்டியின் பெயர் , விலை .. இப்படி எதுவுமே அதில் இல்லை .. மாறாக ஏதோ விகாரமாய் பெரிய தலையுடன் ஒரு உருவம் வரையப்பட்டிருந்தது ... உருது போன்ற எழுத்துக்கள் அதில் இருந்தன .. அவன் கொடுத்த சில்லறையில் 2 என இருந்தது .. ஆனால் அப்படியொரு 2 ரூபாய் நாணயத்தை நான் இதுவரை பார்த்ததில்லை ... சில்லறையின் மறுப்பக்கம் பயண சீட்டில் இருந்த அதே விகாரமான தலை பொறிக்கபட்டிருந்தது ...

பயயுகத்தில் நான் சிக்கி இருந்தேன் .. பேருந்தில் ஏறி 1 மணிநேரத்திற்கும் மேல் ஆகியும் இன்னும் எங்கேயும் நிற்கவில்லை .. அதே சீரான வேகம் ... இருபக்க ஜன்னலிலும் ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை .. அத்துவான காட்டில் வண்டி போவது போல இருந்தது ... காய்ச்சல் பொறுக்க முடியாமல் நான் முணங்க ஆரம்பித்தேன் .. கண்கள் இருண்டு , உட்கார முடியாமல் சால்வையை போர்த்திக்கொண்டு படுத்தேன் ... முத்துவிடம் பேசினால் தேவலாம் போல இருந்தது .. செல்பேசியை எடுத்து பார்த்தால் சுத்தமாக சிக்னல் இல்லை ... எனக்கு பயத்தில் அழுகை வந்தது ... நெருப்பில் ஏதோ கருகும் வாடை பரவியது .. என் உடலின் உஷ்ணம் அதிகரித்ததால் செயலற்று கண்களை மூடிக்கொண்டேன்

சற்று நேரத்தில் அந்த நடத்துனன் என்னை நோக்கி கடுமையான முகத்துடன் வருவது போல் இருந்தது .. " சார் வண்டி எந்த ரூட் ல சார் போகுது .. கிளம்புனதுல இருந்து இன்னும் ஒரு ஊர் கூட வரலையே " என கேட்டேன் ... அவன் எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் என்னை கடந்து சென்றான் .. பேருந்தில் எரிந்த விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன .. இருட்டு ! இருட்டு ... ! வெளியேயும் ,உள்ளேயும் வித்தியாச படுத்த இயலாத இருட்டு ... இதற்குமேல் எனக்கு பொறுமை இல்லை .. தெம்பை வரவழைத்து அந்த நடத்துனனிடம் சென்றேன் ..

" சார் வண்டிய கொஞ்சம் நிறுத்துங்க .. நா urine போகணும் .. "
அவன் என்னை சட்டையே செய்யாமல் இருந்தான் ... ஓட்டுனரை பார்த்த நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன் .. அவனுக்கு இரண்டு கால்களுமே இல்லை .. accelerator இல் ஒரு பெரிய கல் வைத்து கட்ட பட்டிருந்தது ...
" யோவ் நி இப்ப நிறுத்த போறியா இல்லையா டா ? " நடத்துனரின் சட்டையை பிடித்த எனக்கு " பளார் "! என ஒரு அறை விழுந்தது .. நான் சுருண்டு விழுந்தேன் ...

கண் முழித்து பார்த்த என்னால் நம்ப முடியவில்லை .. ஆம் .. நான் இருந்தது என் வீட்டில் , என் அறையில் .... என்னை திட்டியபடியே அம்மா அறைக்குள் நுழைந்தாள் ..." ராத்திரி மூணு மணிக்கா வருவ ? .. காலைல கெளம்பி வந்து இருக்கலாம் ல ? ...

"காய்ச்சல் அதிகமா இருந்துதுன்னு வந்தேன் ... "
" காய்ச்சல் வச்சிகிட்டா 11 தோச சாப்ட ? ... "
" 11 ஆ? ....... !
"ஆமா டா .. மனுஷன் மாதிரியா சாப்ட நீ ? ..."

நா எப்படி இங்க வந்தேன் ... எனக்கு தலை சுற்றியது ... நேற்று இரவு நடந்தவை கண் முன்னே நிழலாய் வந்து போயின ....

" ஹரி உங்க காலேஜ் பக்கத்துல , பஸ் accident ஆச்சாமே .. பேப்பர் ல போட்டு இருக்கு பாத்தியா ? .. அதை பிடுங்கி படித்தேன் ..

பேருந்து
விபத்து : இருவர் பலி...
நேற்று காலை சுமார் பத்து மணியளவில் அச்சரபாக்கம் அருகில் நின்று கொண்டிருந்த பேருந்தில் லாரி மோதியதால் , பேருந்து நடத்துனர் , ஓட்டுனர் பலி .. என அச்சிடபட்டிருந்தது .. கட்டம்கட்டிய படத்தில் தர்மராஜ் என்ற பெயரில் அந்த நடத்துனன் முறைத்து கொண்டிருந்தான்
சிதைந்து போன பேருந்தின் முகப்பு படத்தில் " காளிங்கா டிராவல்ஸ் " என எழுதபட்டிருந்தது.


Wednesday, September 30, 2009

நான், சிவா , சில தேவதைகள் .....


"ஞாயிறு என்பது கண்ணாக , திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக ,சேர்ந்தே நடந்தது அழகாக "

தம்மடித்து கொண்டிருந்த சிவாவை வெறுப்பேற்ற பாடினேன் .. அவன் சட்டை செய்யாமல் வானத்தை வெறித்து கொண்டிருந்தான் . நானும் சிவாவும் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாய் இருக்க விதி செய்யப்பட்டவர்கள் ... 11 ஆண்டுகள் சேர்ந்து படித்தாலும் கல்லூரியின் கடைசி நாளான இன்றும் , பள்ளியின் எங்கள் கடைசி நாளும் தான் நினைவில் ஆழ பதிந்துள்ளது .. காரணம் எங்கள் இருவர் வாழ்வில் வந்து போன காதல்களுக்கும் அன்றே கடைசி நாட்களாக அமைந்தது ....


பத்தாவது படிக்கும் வரை ரயில் நிலையத்தில் இருக்கும் ரோஸ் நிற பூச்செடி , பச்சை நிறமே பாடல் இப்படி எதை பார்த்தாலும் எனக்கு என் பால்ய தோழி மதுவின் நினைவு ஒரு நொடியாவது வந்து போகும் .. அதைத்தவிர வேறு யாரின் நினைவும் வந்ததில்லை .. நானும் சிவாவும் படித்தது ஆண்கள் பள்ளிஎன்றாலும் ,நாங்கள் சென்ற டியுசனில் பெண்களும் படித்தனர் .. பத்தாவதில் நான் அமுல் பேபி , சிவாவோ மெலிதாக funk விட்டபடி இருப்பான் .. எங்கள் டியுசனில் படித்த சுஜாவுக்கு அவன் மேல் ஒரு கண் .. சிவாவும் அவளும் ஜாடயிலும் , கண்ணாலும் பேசிகொள்வார்கள் ...
பள்ளியின் இறுதிநாளான அன்று சிவாவிடம் கேட்டேன் .. " டேய் நி சுஜாவ லவ் பண்றியா டா ? " ... "லவ் ah .. போடா வெண்ண .. சும்மா பாத்தமா டைம் பாஸ் பன்னோமானு போய்டனும் புரியுதா ... அவல சும்மா trial பாத்தேன் டா .. நீயும் வேணும்னா பாரு " என்றான் .. ச்சே ஒடிக்கி போன்ற இந்த சுஜாவை விட என் மது இன்னும் அழகாய் இருக்ககூடும் என என் மனம் சொல்லியது ...

அடுத்து நாங்கள் +2 படித்து முடித்தது இருபாலர் பயிலும் பள்ளியில் .. பள்ளியின் கடைசிநாளான அன்று , மீசையும், பெரிய கிருதாவுடன் இருந்த சிவா அழுதுகொண்டிருந்தான் ... "டேய் அழாத டா ..பிரியா பாக்கறா டா " என் சமாதானத்தை அவன் ஏற்கவில்லை ..
" மச்சி , அவ என்ன லவ் பண்ணாட்டி கூட பரவா இல்ல டா .. priya is my sister னு எழுதி வாங்கிட்டா டா .. அந்த பேப்பர் மீரா கிட்ட தான் டா இருக்கு .. அத எப்படியாவது வாங்கிடு மச்சி " என மீண்டும் அழத்தொடங்கினான் .. நான் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன் .. பள்ளியில் சேர்ந்த நாள் முதலே எனக்கு மீரா மீதும் , சிவாவுக்கு பிரியா மீதும் எக்கச்சக்க ஈர்ப்பு ...

மீரா என் ஜன்னலின் தென்றல் .. எனக்கேற்ற உயரம் ... அவளை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நான் நிலவை தொட்டு வந்தேன் ... சுருங்க சொன்னால் , மீராவை பார்த்தால் நான் மட்டையாகி போனேன் ... தைரியமாக அவளிடம் பேசியிருந்தால் இந்நேரம் மீரா என் முதல் காதலி ஆகி இருக்கக்கூடும் .. ஆனால் சிவா ப்ரியாவை தன் முதல் காதலி என கூறிக்கொள்ளலாம் ... சுஜாவிடம் பார்த்த trial ப்ரியாவிடம் நன்கு அவனுக்கு உதவியது ..தொட்டு பேசுவதும், செல்லமாய் கிள்ளுவது வரை சிவாவும், பிரியவும் நெருக்கம் காட்டினார்கள் ..
" மச்சி மீரா கூட இப்போ எனக்கு க்ளோஸ் ஆயிட்டா .. ந உன்னோட லவ் கு கண்டிப்பா ஹெல்ப் பண்றேன் டா " என சிவா சொன்னது என்னை கடுப்பேற்றியது .

பிரியவும் ,மீராவும் நெருங்கிய தோழிகள் ... ஒரே நிறம், ஒரே உயரம் ... ஆனால் என் ஆளுக்கு இருந்த அழகிய தெற்றுப்பல் இந்த சிவாவின் ஆளுக்கு இல்லை ... எது எப்படியோ ஜெட் வேகத்தில் சென்ற சிவாவின் அலப்பறை ப்ரியாவிடம் propose செய்ததும் கவுந்துவிட்டது ... முடிவில் நடந்த பஞ்சாயத்தில் priya is my sister என எழுதிக்கொடுத்தான் இந்த வீனா போன சிவா ....

என் தேவதையிடம் இருந்த அந்த பேப்பரை கேட்பது போல அவளிடம் முதல் முறை பேச எண்ணினேன் .... இறுதி பரீட்சை முடிந்து அவள் அருகில் தயங்கி நின்றுக்கொண்டிருந்த என்னிடம் அந்த காகிதத்தை நீட்டிவிட்டு கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு நடந்தாள் ... " priya is my sister " என எழுதப்பட்ட அந்த காகிதம் சிவா காதலின் சமாதி .. ஆனால் அது இன்றுவரை என் மீராவின் நினைவு சின்னம் ...

அது வரை வகுப்பில் என் "பெஞ்ச் மேட்" ஆக இருந்த சிவா , நான் படித்த பொறியியல் கல்லூரியில் எனக்கு பெஞ்ச் மேட் , ரூம் மேட் , பார் மேட் , ப்ராஜெக்ட் மேட் என சகலமும் ஆகிப்போனான் .. எங்கள் நட்பு இன்னும் ஆழமாகிப்போனது ... அன்று எங்கள் கல்லூரி இறுதி தேர்வை முடித்திருந்தோம் .. அன்று இரவு எங்களின் 4 ஆண்டுகால கல்லூரி வாழ்கை நிலவை வருடி சென்ற மேகத்தாலும் , சிவாவின் சிகரெட் புகையிலும் அசைபோடப்பட்டது ...

"டேய் .. அணு லெட்டர் கொடுத்தா போல? .. எங்க அது ? ..
" அந்த மயிர அங்கேயே கிளிச்சி போட்டுட்டேன் டா ! என சிவா கத்தினான் ...

கல்லூரி வாழ்வில் காதலுக்கு இடம் குறைவு தான் ... பெண் உடலை தொடுவது, முத்தம், அவளோடு ஊர் சுற்றுவது , அதுவரை நண்பர்களுடன் மட்டும் காமத்தை பற்றி விவாதித்த மனது பெண்ணிடம் காமத்தை பற்றி விவாதிக்க ஆர்வம் காட்டியது ... "ஆண் பெண் நட்பு" என்ற போர்வையில் இவையனைத்தையும் செய்ய முடிந்தது ... சிவாவும் , அணுவும் அந்த போர்வையில் அடித்த கூத்து சொல்லி மாளாது ... அவர்களை பார்த்து எனக்கும் ஆசை வந்தது ... நான் "பெண் தோழி " என தேடி பிடித்தது சுதாவை !!!

சுதாவுக்கும் , அணுவுக்கும் அறுபது வித்தியாசங்கள் இருந்தன ... அணு தளுக், மொளுக் கவர்ச்சி நடிகையை போல ... எதற்கும் அஞ்சாதவள் ( சிவாவுக்கும் அவளுக்கும் பலான பலானதெல்லாம் முடிந்தாயிற்று ) .. சுதாவோ கண்ணாடி போட்ட பழம் போல இருந்தாள் .. சிவாவும் ,அணுவும் தங்களின் வருங்கால honeymoon spot முதல் தங்கள் குழந்தையின் school வரை முடிவு செய்திருந்தனர் .. என்னால் சுதாவை மனைவியாக கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை ...

" இங்க பாருடா .. பொண்ணுங்க எல்லாம் இப்போ சரி இல்ல ... arrange marriage நா second hand தான் டா கெடைக்கும் ... ஒழுங்கா சுதாவ மடக்க பாரு .. ஏதோ நா பன்ன புண்ணியம் எனக்கு அணு கெடச்சி இருக்கா .. நீயும் காதல அனுபவிச்சு பாருடா .. அப்போ தான் உனக்கு புரியும் " என சிவா அறிவுரை கூறினான் ...

நானும் சிவாவும் " double bedroom flat " வாங்க தீர்மானித்தோம் ...சிவா- அணு , நான்- சுதா வசிப்பதற்காக ... சினிமாவில் வருவது போல ஜோடியாக டூயட் பாடி கனவுகண்டோம் ... சில நாட்களே கனவு நீடித்தது .. சுதா வீட்டில் செல் போனை பிடிங்கிய முதல், அணு சிவாவை உதறிவிட்டு ராகுல் பின்னால் சென்றது வரை ..... சிவாவின் முகத்தில் அதன் பின் நான் சிரிப்பையே பார்த்ததில்லை ...

அன்று வாங்கிய பீரை "பாட்டில் சிப்" அடித்துவிட்டு சிவா கத்தினான்
" மச்சா ... காதலோட வலி அனுபவிச்சா தான் டா தெரியும் .. உனக்கு எங்க தெரிய போகுது? நீ பன்னுனதேல்லாம் காதலே இல்ல டா ! யாருக்கும் ப்ரொபோஸ் பண்ணக்கூட உனக்கு தைரியம் இல்ல டா "

" நீ பன்னுனதெல்லாம் மட்டும் என்ன காதலா? " என நான் சிவாவை பற்றி எண்ணிக்கொண்டேன் ....

சிவா ஒரு ஓரமாய் மட்டையாகி கிடந்தான் .... மேகங்களில் இருந்து விடுப்பட்ட நிலவை கண்டதும் எனக்கு மீண்டும் என் பால்ய தோழி மதுவின் முகம் நினைவுக்கு வந்தது ...

"நேற்றைய பொழுது கண்ணோடு .. இன்றைய பொழுது கைய்யோடு
நாளைய பொழுதும் உன்னோடு .. நிழலாய் நடப்பேன் பின்னோடு !"

Sunday, August 16, 2009

மர்ம தோட்டத்தின் இரவு பொழுதுகள்...


காலை 6 மணி ... மழை நீர் ஓடையாய் தெருவில் ஓடிகொண்டிருந்தது . நள்ளிரவில் தூக்கம் களைந்து ஜன்னலில் நின்றபோது மழை சுழன்றி அடித்தது நினைவுக்கு வந்தது .... அன்று நான் கண்ட கனவால் பயமும், அமானுஷ்யமும் என்னை சூழ்ந்து இருந்தன .. "என் படுக்கை அறையில் கணினி தானே இயங்கியது .. அலமாரியை திறக்க முடியவில்லை , என்னை தவிர வேறு ஒன்று அறையில் இருப்பது தெளிவாய் தெரிந்தது .. மூச்சு விட முடியாமல் தரையில் உருண்டேன் .. " மேற்சொன்னது தான் அந்த கனவு ...

இந்த பேய் , பிசாசு கதைகளில் எல்லாம் கவனம் விட்டு சில வருடங்கள் ஆகி விட்டன .. இயந்திர வாழ்கையில் அவற்றின் மேல் பயம் காணாமல் போய் இருந்தது அல்லது மறந்து போய் இருந்தது. என் இளமைக்கால வாழ்க்கை கதைகளாலும் , அமானுஷ்யதாலும் , மிதமிஞ்சிய கற்பனைகளாலும் நிரம்பியது .. 17 ஆண்டுகளுக்கு முன்பு என் அறை இருக்கும் இடத்தில் சிறிய தோட்டம் ஒன்று இருந்தது .. எங்கள் பழைய வீட்டின் பின் புற கதவின் வழியில் தோட்டத்தை அடயலாம் . ஒரு கொய்யா மரம், ஆரஞ்சு மரம், முருங்கை மரம் ( வேதாளத்தின் இருப்பிடமாக கருத படுவது ) சில வகை டிசம்பர் செடிகள் அடர்த்தியாய் படர்ந்து இருந்தன .. கண்ணாமூச்சி விளையாட்டில் அனைவருமே கச்சிதமாய் ஒளிந்துகொள்ள தோட்டத்தில் புதர்களும் , பொந்தும் நிறைய இருந்தன ...

தோட்டத்தின் செடிகள் இரவில் பேசிக்கொள்வதாக பாட்டி என்னை பயமுறுத்துவது உண்டு .. ஐந்து தலை நாகம் , இரவில் தோட்டத்தின் வழியாக சென்று கிணற்றில் குளிக்கும் பேய் , இன்னும் சில பயங்கர விலங்குகள் இரவில் அங்கே வருவதாக பாட்டி சொல்வாள் . இரவில் நான் அங்கே செல்வதை தடுப்பதற்கு சொல்லப்பட்ட கதைகள் அவை என எனக்கு அப்போது புரியவில்லை .

ஆனால் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது .. ஆம் ... பாட்டி சொன்னதில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. தோட்டத்தின் குணங்கள் இரவு நெருங்க நெருங்க மாற ஆரம்பித்தது , ஒரு நாள் அந்தி மாலை காலத்தில் அடர்த்தியான செடிகளின் நடுவே நின்ற என் மேல் மழை தூர ஆரம்பித்தது .. பலத்த காற்றில் செடிகள் என்னை அறைந்தன , முருங்கை மரம் ஒடிந்து விழுவது போல ஆடியது .. முழுமையாக வளராத என் புலன்களை ஏதோ நான் உணர்ந்த , ஆனால் பார்க்க இயலாத அமானுஷ்யம் ஆக்கிரமிக்க தொடங்கியது ... வேறு ஏதோ பிரதேசத்துக்கு இழுக்க பட்டு கொண்டிருந்தேன் .. பாட்டி என்னை இழுத்து பின் பக்க கதவை சாத்தும் வரை எனக்கு மூச்சு வர வில்லை ...

சில நாட்களில் அதிகாலையில் நான் எழுவது உண்டு .. தோட்டத்து கதவு பழயது , அதன் மெல்லிய ஓட்டைகள் வழியாக டிசம்பர் செடியை காணலாம் .. இன்னொரு விசித்திரத்தையும் நான் கண்டு இருக்கிறேன் , சிறிய ரக வாகனம் போன்ற ஒன்றில் , மிகச்சிறிய உருவத்தில் சிலர் என் தோட்டத்தை கடந்து போவது போல கதவிடுக்கில் நான் பார்த்திருக்கிறேன் ..ஆனால் பாட்டியின் உதவி இல்லாமல் என்னால் அந்த தாழ்பாளை திறக்க முடியாது .. அடம் பிடித்து திறந்து பார்த்தால் எதுவும் இருக்காது .. பின்னாட்களில் alliens , ET படங்கள் பார்க்கும்போது இச்சம்பவம் என் பொரியில் தட்டியது ...

சில
மாதங்கள் தோட்டத்தில் குழந்தையில் அழுகுரல்கள் கேட்டுகொண்டே இருந்தன ( பூனையின் சேட்டை ) .. அது இன்னும் என்னை கலவரபடுதியது ... மார்கழி மாதத்தில் பனி எங்கள் ஊரில் சற்றே அதிகமாக பொழியும் .. ஒருநாள் ஆரஞ்சு மரத்தில் இருந்து சற்றே வேகமாக வெளியேறிய பனியை பார்த்ததில் எனக்கு காய்ச்சல் வந்தது, அதை பனி என என் மனதிற்கு நினைக்க தோன்றவில்லை ....

எது எப்படியோ .. இன்று தோட்டமும் இல்லை , பாட்டியும் இல்லை .. தோட்டம் இருந்த இடத்தில் என் படுக்கை அறை உள்ளது.பாட்டி சொல்லிய பேய் என்னை தாண்டி தான் குளிக்க செல்ல வேண்டும் .. ஆனால் கிணறு பாழடைந்து போய்விட்டது . பழைய கதைகளை நினைத்ததில் பொழுது ஓய்ந்து இருந்தது .. இரவு அறையில் தனியாக இருந்தேன் ...நேரம் 12 கடந்து செல்ல தொடாஙகியது...அறையில் நிறைந்திருந்த நிசப்தத்தால் மழையின் சத்தம் பெருசாக கேட்டது .. வெட்டப்பட்ட தோட்டத்தின் வேர்கள் என் அறையின் அடியில் இன்னும் உயிருடன் இருப்பது போல உணர்ந்தேன்..மீண்டும் கற்பனைகளில் மட்டும் மிரட்டிய அமானுஷ்யம் நிஜத்தில் என் கட்டுபாட்டை பறிக்க தொடங்கியது... பய உணர்வுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க தொடங்கினேன் ..
இரவு 10 மணிக்கு மேல் அந்த அறையில் நான் இருப்பதில்லை ... நான் வீரன் தான் .. பயம் வரும் வரை ... !

Wednesday, August 5, 2009

பூனை


புனர்வின்போதே குழந்தையின் அழுகுரல் - பூனைகள் இரவில் ......

Tuesday, May 19, 2009

சில கேள்விகளும், ஒரு முடிவும்.


நீ என்னுடைய நாயகன் இல்லை ... நீ என்னுடைய தலைவனும் இல்லை
உன்னை சிலர் நாயகன் என்பர் .. சிலர் தலைவன் என்பர் ...
சிலர் உன்னை கொலையாளி என்பர், பயங்கரவாதி என்பர்..
தந்திரக்காரன் என அப்பா சொன்னார் , முட்டாள் என செய்தி தாளில் படித்தேன் .


இங்கு இருக்கும் பலர் தங்களின் பிள்ளைக்கு உன் பெயரை வைத்ததாக
பெருமையாக சொன்னார்கள் .. ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் அதை பற்றி பேசுவது கூட இல்லை .. காரணம் என்னவோ ? நான் அறியேன் .....
அவர்களின் பெருமையை கெடுப்பது போல எதையாவது செய்தாயா நீ ?!

எல்லா வாரமும் நீ என் வீடு தேடி வருகிறாய் .. வார பத்திரிகையில் வரும் உன்னை பற்றிய தொடர்களால் ....
டீக்கடையில் தொங்கும் சுவரொட்டியில் பளீரென என்னை பார்த்து சிரிக்கிறாய் சில நேரம் முறைத்தபடி எதையோ சொல்ல விளைகிறாய் ..

உன் பெயரில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு , அவர்களை அழைக்கும்போது சில நேரங்களில் உன் நினைவும் வருவதுண்டு ..
இரண்டாம் வகுப்பில் , பாட்சா பட சுவரொட்டியை பார்த்ததில் இருந்து ரஜினியின் பெயர் எனக்கு தெரியும் .. அது போல உன் பெயர் எப்போது என் மனதில் பதிந்தது என தெரியவில்லை ... ஒருவேளை அதற்கும் சிறுவயதில் என் தந்தை கூறிய கதைகளால் நீ எனக்குள் பதிந்து இருக்கலாம் ....

எது எப்படியோ ... அநீதியை எதிர்த்து மாண்டவர்களின் மரணம் வீரமரணம் என்றால் ..... உன் மரணத்தை குறிக்க அதை விட சிறந்த சொல் வேறு உண்டா என்ன? .....

Friday, May 15, 2009

The day i begged,& begging for that day again...

                         Everyday brings us a new colour .. sometimes it makes u as a hero or sometimes it makes u as a joker . Very rarely it makes u fun , i want to share a day tat made me a begger.

The beginning of the day 
 10 am 
                                            Its a sunday,i was in my college room. being a holiday i woke up by 9am,i felt very lazy and had no idea of doing anything . suddenly a bulb glowed in my mind ,i wondered myself "why cant i make it as a perfect holiday???" so i called my friends gopinath and bala and told my holiday plan of going to a beach nearby... they agreed to come with me !! i took my sun glass ( since i am using it for first time) and ofcourse took Rs.100 for my expenses.

Share auto & Coconut Trees
 11 am 
                                            We planned to go east coast road, its about 30 min travel from our college, share auto is the only appropriate way of transport. the road was very narrow and had coconut trees as its side walls, and ofcourse we seen small villages on our way.I explained my holiday plan to gopi of going to any boat house in ECR as it has plenty of backwaters and boating houses. i asked him  " how much do u bring for your expenses ?" he said "50 rupees! its enough na?" .. i asked the same question to bala " wat about u? how much u r having?" he said "nothing machi,pocket empty.." .. i didnt expected this from him ,so i got trouble, i know atleast we need another hundred rupees to manage our plan. godsake i had a friend in the passingby village, so called him and asked to bring some money for me. By the next half an hour i got money from him , finally we reached the great east coast road!

Sun glass and chicken biriyani
1 pm.
                                             The part of the East coast road we reached is actually 50kms towards pondicherry and far away from chennai. we asked the persons there about any tourist spot nearby . everyone suggested us to go Aalambara fort and beach , some 8 kilometers from that spot. we got into a restaurant and  ordered chicken biriyani( only after carefully verifying the rate in menu card) . after finishing our lunch we checked our budget , we had only 80 rupees more to spend. we used to take pictures on roadside one by one( since we had only one sunglass , we have to exchange it) , then started our journey to aalambara fort in a share auto.



A sizzling boating in aalambara beach
3 pm
                                        
       Aalambara is a amazing beach , still hiding its natural treasures unpolluted. there is a sculpture states tat aalambara was once  a harbour during nizam period. you can find a fully damaged fort with only the walls are remaining and u can also spot the pairs enjoying their secret moments inside the bushes. But the beach is amazing and nature fresh. Another important landmark in aalambara is the sandspots that seperating the beach and backwater is scenic beauty.
            
                                               Boating is also available in aalambara ,but the rate is variable.We asked for boating , rate they offered first is 300 rupees , we begged and begged and finally had a boating for just 50 rupees. We enjoyed the whole half an hour of boating and took so many snaps in different angles.  


Farm houses and water packets
5 pm

                                        
   we decided to walk to reach the main road           ( some 4 kms from beach). Eventhough share auto is available we didnt had enough money to spend. The way is very narrow covered on two sides by dense trees. we also spot beautiful farm houses on bothsides, i imagined a life in such houses.. its just like a heaven .
                 
                                           I felt very thirsty , surprisingly gopi had an extra 5 rupees to spend ,so it was a really a good news at tat moment.we bought water packets and had a refreshment and finally reached the main road.

Stupid decision that made us beggers
5.30 pm
                                          We had 30 more rupees to spend ,our estimation was to spend 15 for bus( 5 rupees each) to reach ECR and again 15 rupees( share auto) to reach my friend's village cheyyur. so that we can get money from him to reach our college. we waited for the bus for more than half an hour and felt very very drowsy. I dont know who took tat stupid decision but we got into a deluxe bus whose fare is almost doubler than ordinary bus ,the fare was 10 rupees each and so we have to give what we had the 30 rupees . we stood in  pocket empty condition in ECR.

The successful attempt of begging
6 pm

                                        We need 15 more rupees to reach my friends village , i was wearing a cargo jeans which had 8 pockets. i searched each pocket with hope .. oh god's grace i had 8 rupees in my pocket!! so we need just 7 more to reach our destination. gopi on pointing out a tea shop said" macha shall we ask a job in that tea shop , so that we can earn 7 rupees".. bala too agreed with him , but being a lazy one i declined that idea. i said " i am having an idea! , why cant we ask anyone here to help us?" ... bala said " so... u are going to begg" but no other way i decided to ask help to a stranger( we choosed him ,because he seemed to have our same age group) .. myself and bala went to ask him help, gopi stood aside in hesitation. i weared my sun glass again..here is our conversation..

Me : excuse me boss!! give me 7 rupees !!! ( in loud voice) 
The stranger: what???? ... wh wh why should i??
Me : actually we all are engineering students, we lost our purse , so please help us by giving 7                rupees boss...
The stranger: oh its ok .. ( he gave us 10 rupees!!!!) 
Me: ha thank u boss .. give your mobile number..( again in louder voice)
The stranger: why... ?? ( he hesitated a lot)
Me : hey give me man .. dont get feared...!!!
The stranger: k i will give ( he gave his number)
Me : thats good .. your name boss..
The stranger: vinoth..
Me : k vinoth .. thanks a lot , we never forget this...!! bye vinoth..
The stranger: ok ok bye.
              
                                          
                                        Finally we were safe, we took a share auto and managed to reach my friends village, there we got money from him .

A travel in the dark road:
7.30 pm

                                       Being night we cant find a direct bus to our college. We got a bus to a adjacent town , we were among only few in the bus.The road was so dark as it didnt had street lamps, being night the breeze was cool and gentle. I felt a greater relaxation.

Idiyaapam with paaya
8.30 pm

                                      We got down from the bus in our adjacent town, where we met vishnu( actually me, gopi, vishnu & bala were so close and one can spot us together frequently ) , there vishnu sponsered for our dinner, we had idiyaapam with paaya( Great combination) and parottas , we explained the entire story to vishnu. After having great deal of dinner , again we got a bus to our college and reached by 10 pm. 
 
                                      while i got into sleep,  i closed my eyes and had a rewind on that whole day... my mind said " can i again get a day like this" ..